வந்தார் கேப்டன்-ஆற்றில் விழுந்த ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:விஜயகாந்த்தைப் பார்க்கும் ஆர்வத்தில் 20க்கும் மேற்பட்டோர் சிறிய வல்லப் படகில்ஏறி ஆற்றில் சென்றதால், அது பாரம் தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்தது.அதிர்ஷ்டவசமாக அத்தனை பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தேமுதிக தலைவரும், விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏவுமான விஜயகாந்த், கடலூர்மாவட்டம் டி.வி.புத்தூர் அருகே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தைப்பார்வையிட வந்தார். விஜயகாந்த் வருவதைக் கேள்விப்பட்டதும் அக்கம் பக்கத்துகிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிராமத்தினரும், அவரது ரசிகர்களும் பெரும்திரளாக அங்கு வந்தனர்.

இதில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ரசிகர்கள் 20 பேர் சிறிய படகு ஒன்றில் ஏறிவெள்ளாற்றில் பயணித்தனர். அப்போது பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதனால்அத்தனை பேரும் ஆற்றில் விழுந்தனர்.

உடனடியாக கிராம மக்களும் மற்றவர்களும் சேர்ந்து அவர்களை மீட்டு கரைக்குக்கொண்டு வந்தனர். காயமடைந்த சிலர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+