மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவா?-ஜெ மறுப்பு
டெல்லி:நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பிரச்சினைகளின்அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படும் என அதிமுக மாநிலங்களவைகொறடா மலைச்சாமி கூறியதாக வந்த தகவலை ஜெயலலிதா மறுத்துள்ளார்.
இன்று தொடங்கும் இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாகநாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தனது வீட்டில்அனைத்துக் கட்சிக் கொறடாக்களின் கூட்டத்தைக் கூட்டினார்.
இக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்து கொண்ட மாநிலங்களவை கொறடாமலைச்சாமி பேசுகையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு கொண்டுவரும் சட்ட முன்வடிவுகள், மசோதாக்கள் ஆகியவற்றை, பிரச்சினைகளின்அடிப்படையில் ஆதரிக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவுறுத்தியுள்ளார்.
எனவே பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்குபிரச்சினைகளின் அடிப்படையில் அதிமுக ஆதரவு தரும் என்றார்.
இதன் மூலம் காங்கிரசை தாஜா செய்யும் வேலையை அதிமுக ஆரம்பித்துள்ளதாகசெய்திகள் பரவின. டெல்லியிலும் இந்தச் செய்தி முக்கிய இடம் பெற்றது.
இந் நிலையில் இந்தத் தகவலை மறுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடரும் வரை மத்திய அரசுக்கு ஆதரவு தரும்சிந்தனையே எங்களுக்கு இல்லை. எங்கள் கட்சி கொறடா மலைச்சாமி அப்படிப்பேசவே இல்லை. பத்திரிக்கைகள் தான் செய்தியை திரித்து வெளியிட்டுவிட்டன.
மத்திய அரசுக் கூட்டணி கருணாநிதியின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஆடிக்கொண்டிருக்கிறது. இந் நிலையில் அவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம்எங்களுக்கில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஆனால், பிரச்சனை அடிப்படையில் ஆதரவு என்று மலைச்சாமி மூலம் காங்கிரஸ்கட்சிக்கு அதிமுக நூல்விட்டுப் பார்த்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள்கருதுகின்றனர்.
இந்த ஆதரவு குறித்து காங்கிரஸ் கட்சி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதிகாத்ததால் தனது நிலையை அதிமுக மாற்றிக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
மாநிலங்களவையில் அதிமுகவுக்கு எம்பிக்கள் இருந்தாலும் மக்களவையில் ஒருஎம்பியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications