தமிழக மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கி சூடு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைகடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 மீனவர்கள் காயம்அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ஆதம் பாலம் அருகே அவர்கள்மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு இலங்கைகடற்படை வீரரர்கள் வந்தனர். அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுடஆரம்பித்தனர்.
இதில் ஒரு படகு சேதமடைந்தது. அதில் இருந்த அருளானந்தம்உள்ளிட்ட 2 மீனவர்களுக்கு குண்டுக் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களை அழைத்துக் கொண்டு மற்ற மீனவர்கள்கரைக்கு விரைந்தனர்.
காயமடைந்த இரு மீனவர்களும் ராமநாதபுரம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் ராமநாதபுரம் மாவட்டமீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications