For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியாறு-கேரள மாநிலம் இடுக்கியில் இன்று பந்த்

By Staff
Google Oneindia Tamil News

இடுக்கி:முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடிக்கு மேல் அதிகரிக்கக் கூடாதுஎன்று வலியுறுத்தி, அணை இருக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இன்றுமுழு அடைப்பு நடத்தப்படுகிறது.

மக்கள் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு இந்த பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் எனஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதை ஏற்க மறுத்த கேரள அரசு இதிலிருந்து தப்பிக்க தனது சட்டசபையில்அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இப்பிரச்சினை குறித்து விவாதிக்க இரு மாநிலமுதல்வர்களின் கூட்டம் டெல்லியில் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.

இந் நிலையில் அணை உள்ள இடுக்கி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு நடத்தமக்கள் பாதுகாப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள்அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X