குட்டியை காக்க புலியுடன் மோதி இறந்த யானை
பரிபாதா:மேற்கு வங்க மாநிலம் பரிபாதா காட்டுப் பகுதியில் புலியிடம் சிக்கிக் கொண்ட தனதுகுட்டியை மீட்க புலியுடன் கடுமையாக சண்டையிட்டு பரிதாபமாக மடிந்தது தாய்யானை.
இதுகுறித்து சிமிலிபால் புலிகள் சரணாலயத்தின், நவானா (தெற்கு) சரக வன அதிகாரிஅஸ்வினி குமார் மொஹந்தி கூறுகையில், புதிதாக பிறந்த யானைக் குட்டிகளைபுலிகள் விரும்பி சாப்பிடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த காட்டிற்குள் புதிதாக பிறந்த ஒரு யானைக் குட்டியை, புலிஒன்று கண்டு அதை சாப்பிட முயற்சித்தது. இதைப் பார்த்த தாய் யானை, புலியுடன்கடுமையாக மோதி தனது குட்டியைக் காப்பாற்ற முயற்சித்தது.
ஆனால் புலியின் தாக்குதலால் படுகாயமடைந்த யானை ரத்த வெள்ளத்தில்பிணமானது. யானையை புலி கடுமையாக தாக்கி குதறி எடுத்துள்ளது. யானையின்உடல் முழுவதும் ஏராளமான காயங்கள் உள்ளன.
தாய் யானையைக் கொன்ற புலி பின்னர் குட்டி யானையைத் தூக்கிக் கொண்டுகாட்டுக்குள் சென்று விட்டது. இறந்த தாய் யானைக்கு வயது 30.
யானையின் வயிற்றின் அடிப் பகுதியையும், கழுத்தையும் குறி வைத்து புலிகடுமையாக தாக்கி குதறியுள்ளது என்றார் மொஹந்தி.