1,700 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் செளதி வருகை

Subscribe to Oneindia Tamil

துபாய்:இந்தியாவிலிருந்து கிளம்பிய 1,700 பேர் கொண்ட முதல் ஹஜ் யாத்திரைக் குழுவினர்ஜெட்டா வந்து சேர்ந்தனர்.

இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் யாத்திரை தொடங்கிவிட்டது. உலகெங்கிலும்இருந்தும் உள்ள முஸ்லீம்கள் செளதிக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1.57 லட்சம் பேர் ஹஜ் யாத்திரைமேற்கொள்ளவுள்ளனர். தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலங்களிலிருந்து3,800 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.

ஹஜ் யாத்ரீகர்களுக்காக சென்னையிலிருந்து 14 சிறப்பு விமானங்கள்இயக்கப்படவுள்ளன. டிசம்பர் 3ம் தேதி முதல் விமானம் சென்னையிலிருந்துகிளம்புகிறது. 10ம் தேதி வரை இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.இந்தியாவில் இருந்து முதல் ஹஜ் சிறப்பு விமானங்கள் நேற்று கிளம்பின. முதல்குழுவில் இடம் பெற்றிருந்த 1,700 பேர் செளதி அரேபியா சென்றடைந்தனர்.

ஜெட்டா நகரில் வந்திறங்கிய 215 பேரை விமான நிலையத்தில் செளதிஅரேபியாவுக்கான இந்தியத் தூதர் எம்.ஓ.எச்.பாரூக் விமான நிலையத்தில்வரவேற்றார். இதேபோல 1,505 பேர் மதீனா நகரை அடைந்தனர். அவர்களைதுணைத் தூதர் ஆசப் சயீத் வரவேற்றார்.

இந்த 1,505 பேரும் டெல்லி, நாக்பூர், லக்னோவிலிருந்து வந்தவர்கள் ஆவர். ஹஜ்யாதீர்கள் வருகை குறித்து சயீத் கூறுகையில், செளதி அரேபியாவுக்கு வரும் ஹஜ்யாத்ரீகர்கள் கண்டிப்பாக போலியோ தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் எனசெளதி அரசு வலியுறுத்தியுள்ளது.

இதற்கான சொட்டு மருந்துகள் செளதி விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.செளதிக்கு முதலில் வந்த குழுவில் இருந்தவர்களுக்கு நமது நாட்டிலேயே தடுப்புமருந்து கொடுக்கப்பட்டு விட்டதால் இங்கு அவர்களுக்கு சொட்டு மருந்துதரப்படவில்லை.

இந்த ஆண்டு இந்தியாவிலிருது 1.57 லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணமாகவரவுள்ளனர். இவர்களில் இந்திய ஹஜ் கமிட்டி மூலம் 1.07 லட்சம் பேரும், தனியார்சுற்றுலா நிறுவனங்கள் மூலம் 47,000 பேரும் வரவுள்ளனர்.

இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த ஆண்டுஅதிக அளவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.முதல் குழு தவிர மேலும் 45,910 பேர் மதீனாவுக்கும், மற்றவர்கள் ஜெட்டாவுக்கும்வருகை தரவுள்ளனர் என்றார் சயீத்.

டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், லக்னோ, அகமதாபாத் ஆகியநகரங்களிலிருந்து வரும் பயணிகளை செளதி அரேபியன் ஏர்லைன்ஸ்விமானங்களும், கொல்கத்தா, நாக்பூர், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், கோழிக்கோடு ஆகியஊர்களிலிருந்து வரும் யாத்ரீகர்களை ஏர் இந்தியா விமானங்களும் செளதிக்குஅழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 325 விமானங்கள் இதில்ஈடுபடுத்தப்படவுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+