மருத்துவ பல்கலை துணைவேந்தர் முஸ்தபா உசேன்
சென்னை:சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் மீர்முஸ்தபா உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்துவந்த டாக்டர் பிரம்மானந்தம் தனது பதவியை ராஜினாமா செய்ததால், புதியதுணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பச்சிளம்குழந்தைகளுக்கான பிரிவு தலைவராக பணியாற்றி வரும் டாக்டர் மீர் முஸ்தபாஉசேனை, புதிய துணைவேந்தராக நியமித்து ஆளுனர் பர்னாலா உத்தரவிட்டுள்ளார்.
பதவி ஏற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் உசேன் இருப்பார்.பழனியைச் சேர்ந்த டாக்டர் உசேன், மதுரையில் பள்ளிப் படிப்பையும், அமெரிக்கன்கல்லூயில் பி.யூ.சி. பட்டத்தையும் பெற்றவர்.
பின்னர் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்த அவர், நெல்லைமருத்துவக் கல்லூரியில் டி.சி.எச். பயின்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.டி.முடித்த பின்னர், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆய்வையும்மேற்கொண்டார்.
அதன் பின்னர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமநாயக்கனூரில்உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலில் பணிக்கு சேர்ந்தார்.
தமிழார்வம் மிக்க டாக்டர் உசேன், கதை, கட்டுரை, கவிதைகளையும் எழுதியுள்ளார்.அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினராக உள்ள இவர் மழலை நலம் என்றபிரபலமான மருத்துவப் புத்தகத்தையும் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications