For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரபிக் கடலில் வீணாக கலக்கும் பெரியாறு நீர்!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் பெரும்பகுதி அரபிக் கடலில் போய் வீணாக கலந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. 142 அடி வரைநீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரளம் ஏற்க மறுத்துவருகிறது.

இதனால் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ள அதிக அளவிலான நீர் வீணாககேரளப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு கடலில் போய்க் கலந்து வருகிறது.

இந்த நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டால் பின்னால் தமிழக விவசாயிகளுக்குபயன்படும். ஆனால், அவ்வாறு பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் கேரளம்தெளிவாக உள்ளது.

பெரியாறு அணைக்கு வரும் உபரி நீரை தமிழக பகுதிக்குள் அதிக அளவுக்குஎடுக்கும் முயற்சிகள் சில நாட்களாகவே நடந்து வந்தன. இருப்பினும் தண்ணீரைஎடுக்க பயன்படுத்தப்பட்ட ராட்சத குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் அந்தப் பணிஇடையில் பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மண் அடைப்பு சரி செய்யப்பட்டு உபரி நீரை தமிழக பகுதிக்குள் திருப்பிவருகின்றனர் பொதுப்பணித்துறையினர். இருப்பினும் அதிக அளவில் நீர் வருவதால்பெரும்பாலான நீர் கேரள பகுதிக்கே திருப்பி விடப்பட்டு வருகிறது.

தமிழக பகுதிக்குள் 1,100 கன அடி நீரும், கேரள பகுதிக்கு 5,242 கன அடி நீரும்தற்போது திருப்பி விடப்பட்டு வருகிறது. கேரளாவுக்குள் பாயும் நீர் அப்படியேஅரபிக் கடலுக்கே போய்ச் சேருகிறது.

இதற்கிடையே, நவம்பர் 14ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த பெரியாறு நீர் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள நான்கு மின் உற்பத்திஜெனரேட்டர்களில் 3 மட்டும் தற்போது செயல்படுகின்றன. ஒன்றில் மண் அடைப்புஏற்பட்டிருந்ததால் அது இன்னும் இயங்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X