மண்வெட்டியால் பஞ். தலைவர் படுகொலை
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நக்கலமுத்தன்பட்டிபஞ்சாயத்துத் தலைவர் ஜக்கையாவை, அதே பஞ்சாயத்தின் துணைத் தலைவரானதிருப்பதிராஜ் மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்தார்.
நக்கலமுத்தன்பட்டி தலித் பஞ்சாயத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் ஜக்கையாவெற்றி பெற்று தலைவரானார். முன்னாள் தலைவியான ரெஜீனா மேரியின் கணவர்திருப்பதிராஜ் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் முடியும் வரை ஜக்கையாவுக்கு ஆதரவாக திருப்பதிராஜ் தீவிரப் பிரசாரம்செய்து வந்தாராம். தலைவர் பதவிக்கு வந்தவுடன், தான் சொல்லும்படி நடக்குமாறுஜக்கையாவை, திருப்பதிராஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அதைக் கேட்கஜக்கையா மறுத்து விட்டாராம்.
இதனால் திருப்பதிராஜ் ஆத்திரமடைந்தார். இந் நிலையில் புதன்கிழமை காலைஐந்தேமுக்கால் மணியளவில் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சைக்கிளில் ஜக்கையாசென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் மண்வெட்டியால் ஜக்கையாவை சரமாரியாகதாக்கினார்.
இதனால் நிலை குலைந்த ஜக்கையா அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் விடாதஅந்த மர்ம நபர் ஜக்கையாவை விரட்டி விரட்டி அடித்தும், வெட்டியும் படுகொலைசெய்தார்.
சம்பவ இடத்திலேயே ஜக்கையா பிணமானார். திருப்பதிராஜ்தான், இந்தக் கொலையைசெய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் திருப்பதிராஜ் தலைமறைவாகி விட்டார். அவரைபோலீஸார் தேடி வருகின்றனர்.
ஜக்கையா குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசுஅறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்,
நக்கலாமுத்தன் பட்டி கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் சக்கன் என்கிற ஜக்கையாபடுகொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து முதல்வர் கருணாநிதி அதிர்ச்சிஅடைந்தார்.
ஜக்கையாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ள அவர்,ஜக்கையாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications