என்.எல்.சி. ஊழியர்கள் இன்று இரவு ஸ்டிரைக்!
நெய்வேலி:காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெய்வேலி அனல் மின்கழக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக இன்று இரவு முதல் ஒரு நாள் அடையாளவேலைநிறுத்தம் செய்ய நிரந்தர ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
என்.எல்.சியில் சுமார் 13,000 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.தங்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்க வேண்டும், முன் பணமாக ரூ.1000 வழங்கவேண்டும். இதை சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என்று கோரி கடந்த 9நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான திமுகவின்தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச) ஆதரவு தராமல் இருந்தது. மற்றதொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் வலுவடைந்து வருவதைத்தொடர்ந்து தொ.மு.சவும் தற்போது போராட்டத்தை ஆதரித்துள்ளது.
இந் நிலையில், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாளவேலைநறுத்தப் போராட்டம் நடத்த நிரந்தர ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தப்போராட்டம் இன்று இரவு ஷிப்டுக்குப் பின்னர் தொடங்கி நாளை வரை நடைபெறும்.
ஏற்கனவே மழை, வெள்ளத்தாலும் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தாலும் நிலக்கரிவெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், கிட்டத்தட்ட 30,000ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதால், மின்உற்பத்தி கணிசமாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.