தமிழகத்தில் கேரள வாகனங்கள் வழி மறிப்பு
கோவைமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறல் போக்கைக்கண்டித்தும், அணையை கடற்படை வீரர்கள் ஆய்வு செய்ததைக் கண்டித்தும் கோவைமாவட்டத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதியில் தமிழக விவசாயிகள் இன்று கேரளாசெல்லும் வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, முல்லைப் பெரியாறு அணையைகொச்சியில் உள்ள கடற்படை நிபுணர்களைக் கொண்டு இன்று கேரள அரசு ஆய்வுசெய்தது.
தென் மண்டல கடற்படைக் கமாண்டர் தலைமையில் முல்லைப் பெரியாறு அணைக்குவந்த 17 பேர் கொண்ட கடற்படை நிபுணர் குழுவினர் அணைப் பகுதியில் இன்றுவிரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
குழுவில் இருந்த நீர்மூழ்கி வீரர்கள், அணையின் கீழ் பகுதியில் நீர்க் கசிவுஇருக்கிறதா, அணையின் ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினர்.நவீன கருவிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மேலும் அணையின் பல்வேறு பகுதிகளையும் அவர்கள் புகைப்படம் எடுத்தனர்.கேரள அரசின் இந்த செயலைக் கண்டித்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவைமாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக எல்லைப்பகுதியான வாலையாறில், பெரும் திரளான விவசாயிகள் கூடியுள்ளனர்.
கேரளாவுக்கு செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல பொள்ளாச்சி அருகே கேரள எல்லைப் பகுதியில் உள்ள கோவிந்தாபுரம்,நடுப்பனை, வீரப்பன் சத்திரம் ஆகிய இடங்களிலும் இதேபோல சாலை மறியல்போராட்டம் நடந்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் கேரளா நோக்கி செல்லும் சாலைகளிலும் சாலை மறியல்போராட்டத்தில் விவசாயிகள் குதித்துள்ளனர். இந்த சம்பவங்களால் அந்தப்பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.