For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவி சுகன்யா கற்பழிக்கப்படவில்லை

By Staff
Google Oneindia Tamil News

ஓமலூர்:சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி கிணற்றில் பிணமாகக்கிடந்த பிளஸ்டூ மாணவி சுகன்யா, கற்பழிக்கப்படவில்லை என பிரேதப்பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

பெண்ணாகரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி சுகன்யா, ஓமலூர் பாத்திமா மகளிர்மேல் நிலைப்பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். சமீபத்தில் அவரது இறந்தஉடல் பள்ளி வளாக கிணற்றில் மிதந்தது.

இதனால் ஓமலூரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. ஊர் மக்கள் பள்ளிக்குள் நுழைந்துபள்ளிக்கூடத்தை சூறையாடினர். சுகன்யா கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந் நிலையில் சுகன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரம்வெளியாகியுள்ளது. ஓமலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீரா, பன்னீர் செல்வம்,கஸ்தூரி திலகம், சானாபாய் உள்ளிட்டோர் அடங்கிய குழு சுகன்யாவின் பிரேதப்பரிசோதனையை நடத்தியது.

இந்த பரிசோதனை வீடியோவில் படமாக்கப்பட்டது. சுகன்யாவின் வயிறு, கல்லீரல்,மூளை உள்ளிட்ட பகுதிகள் கோவையில் உள்ள தடவியல் துறையின் ரசாயனப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் சுகன்யா கற்பழிக்கப்பட்டாரா என்பது குறித்து சேலத்திள்ள பரிசோதனைக்கூடத்தில் சோதிக்கப்பட்டன. தற்போது பிரேதப் பரிசோதனை முடிந்து அதன்அறிக்கையை போலீஸாரிடம் டாக்டர்கள் ஒப்படைத்துள்ளனர்.

அதில், மாணவி சுகன்யா நீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும், அவர்கற்பழிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சுகன்யா கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் எனகருதப்படுகிறது.

போலீஸ் காவலில் பள்ளி ஊழியர்கள்: இதற்கிடையே கைது செய்யப்பட்டுநீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி ஊழியர்கள் அருள்நாதன்மற்றும் குமார் ஆகியோரை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.

இதற்கிடையே, சுகன்யா மர்மச்சாவு தொடர்பான வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன்வழங்கக் கோரி பள்ளித் தலைமை ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்தமனுக்களை சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படக் கூடும் என்பதால் முன் ஜாமீன் கோரிதலைமை ஆசியை மேரி அல்போன்சா, விடுதி வார்டன் லூர்து மேரி, வேதியியல்ஆசிரியை மேரி பிளாரன்ஸ் (இவர் திட்டியதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது) ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கிருஷ்ணராஜ் அவற்றை தள்ளுபடி செய்தார்.இதேபோல பள்ளிக்கூடத்தை சூறையாடியதாக கைது செய்யப்பட்ட 12 பேரின்சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X