கவுத்துருங்கோ-கருணாநிதிக்கு சு.சுவாமி யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க கேரளஅரசு தவறினால், மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி வாபஸ்பெற வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி யோசனைகூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

உச்சநீதிமன்றமே 142 அடி வரை அணையில் நீர் தேக்கலாம் என கூறி விட்டது.அப்படி இருக்கையில், தமிழக அரசு அந்த உத்தரவை அமல்படுத்த ஏன் தயங்குகிறதுஎன்பது புரியவில்லை.

நெய்வேலி அனல் மின் கழக பங்குகளை தனியாருக்கு விற்றால் ஆட்சிக்கு வழங்கும்ஆதரவை திமுக வாபஸ் பெறும் என கருணாநிதி முன்பு மிரட்டி மத்திய அரசைப்பணிய வைத்தார்.

கருணாநிதியின் மிரட்டலுக்குப் பணிந்த மத்திய அரசும், தனது முடிவை வாபஸ்பெற்றது.

தற்போது ஐந்து தென் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக ஏன் மறுபடியும் மத்தியஅரசை திமுக மிரட்டக் கூடாது?

சில ஆயிரம் என்.எல்.சி. ஊழியர்களுக்காக அவ்வளவு தூரம் போராடிய கருணாநிதி,2 லட்சம் தென் மாவட்ட விவசாயிகள் நலனுக்காக ஏன் இப்படி செய்யக் கூடாது?ஆனால் அவர் விவசாயிகள் குறித்துக் கவலைப்படுவது போலவே தெரியவில்லை.

29ம் தேதி டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்அடிப்படையில், கேரள அரசு அணையின் உயரத்தை அதிகரிக்க ஒத்துக்கொள்ளாவிட்டால் ஆட்சிக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என பிரதமரிடம்கருணாநிதி திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும்.

சமீபத்தில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டபோது, இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்குத் தரும் ஆதரவைஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிச்சயம் வாபஸ் பெறும் என என்னிடம்உறுதியளித்தார் கருணாநிதி. ஆனால் அதன்படி பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினாராஎன்பது தெரியவில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி அளவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினத்தன்று,ஜனதாக் கட்சி சார்பில், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலக வேண்டும் என்றுவலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்.

நேற்று என்னை கேரளாவைச் சேர்ந்த பல எம்.பிக்களும், அம் மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்துப் பேசினர்.அப்போது, சோனியா காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தப் பிரச்சினையைகமுக்கமாக திமுக அரசு முடித்து விடும் என்றனர்.

அவர்கள் சொன்னபடி கருணாநிதி நடந்து கொண்டால் அது தமிழகத்திற்கும்,விவசாயிகளுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும் என பேசி முடித்தார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+