கருணாநிதி எச்சரிக்கை: பிரதமர் தலையீடு-திரும்பிப் போன கடற்படை

Subscribe to Oneindia Tamil

சென்னை:அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் தமிழக அரசின் திட்டத்தை அமல்படுத்துவதுதொடர்பான பரிந்துரைகளை அரசுக்குத் தெரிவிக்க நியமிக்கப்பட்ட உயர் மட்டக்குழுவின் அறிக்கை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்துக்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உள்ள அனைத்துச் சாதியினரும்தமிழ்நிாட்டில் உள்ள இந்துய சமய திருக்கோவில்களில் அர்ச்சகராகலாம் என்று23.5.2006 அன்று தமிழக அரசு ஆணையிட்டது.

இந்த ஆணையைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக, அர்ச்சகர்களுக்குரியபயிற்சிகள் அளித்திட, பாடத் திட்டம், பயிற்சியாளர்களுக்கான அடிப்படைக் கல்வித்தகுதி, வயது, பயிற்சிக் கால வரையறை, எத்தனை இடங்களில் பயிற்சிநிலையங்களை அமைப்பது என்பன போன்ற பொருட்களின் மீது கொள்கைரீதியாகமுடிவுகள் மேற்கொள்ள அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு, ஒய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர் மட்டக் குழுஅமைக்கப்பட்டது.

இந்தக் குழு முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தது. குழுவின்தலைவரான நீதியரசர் ஏ.கே.ராஜன், தனது குழு விரிவாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளபரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்வரிடம் வழங்கினார்.

குழுவின் பிற உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல தேசிக அடிகளார், பேரூர்ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்பிச்சாண்டி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமைச்செயலாளர் திரிபாதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+