மாறன்-ஜெவுக்கு கருணாநிதி வக்கீல் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:முரசொலி மாறன் சிலை வைப்பது தொடர்பாகவும், அவரைப் பற்றியும் அவதூறாகப்பேசியவற்றை 7 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவதூறுவழக்குத் தொடரப்படும் என கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குமுதல்வர் கருணாநிதி வக்கீல் நிாேட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி சார்பில் அவரது வழக்கறிஞர் பிரகாசம் அனுப்பியுள்ளநோட்டீஸில்,

நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைப்பதை சதி செய்து விட்டார் என்றுஜெயலலிதா கூறியிருப்பதை பார்த்து முதல்வர் கருணாநிதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் உண்மையானவை அல்ல.

முரசொலி மாறன் சிலை பற்றி ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள்கண்டனத்துக்குரிவை. மாறன் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி ஆவார். தனதுஅறிவுக்கூர்மையாலும், அளப்பரிய சேவையாலும் உலக அரங்கில் இந்தியாவின்பெருமையை உயர்த்தியவர்.

இந்தியா மிகப் பெரிய வல்லரசாக வர வேண்டும் என்று விரும்பியவர். இதுஅனைவருக்கும் நன்கு தெரியும். அப்படிப்பட்ட ஒரு தலைவர் பற்றி அவதூறாகசொல்லியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

முரசொலி மாறனுக்கு சிலை வைப்பது தொடர்பாகவும், எம்.ஜி.ஆர். சிலையை தடுத்துவிட்டார் என்றும் அவதூறாக, உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளஜெயலலிதா தனது கருத்துக்களை 7 நாட்களில் வாபஸ் பெற வேண்டும்.

இல்லாவிட்டால் ஜெயலலிதா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இந்தவழக்கு தொடர்பான செலவுகளையும் அவர்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+