ராணுவத்தை அழையுங்கள்: விஜயகாந்த் யோசனை
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை ராணுவ உதவியுடன் அமல்படுத்த மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்குத்தண்ணீரைத் தேக்கி வைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் 136 அடிக்கு மேல் தண்ணீரைதேக்க வைக்க முடியாது என கேரளா கூறுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசுதான். இந்த பொறுப்பை அது தட்டிக் கழிக்கமுடியாது. இதில் கால தாமதம் ஏற்பட்டால் இரு மாநில அரசுகளுக்கிடையே சுமூக நிலை போய் விடும்.
டெல்லியில் இரு மாநில முதல்வர்களுக்கிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சூமுக தீர்வு உண்டாகும்என நம்புகிறாம். அப்படி ஏற்படாவிட்டால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ராணுவத்தின் உதவியுடன் இதைச் செய்ய வேண்டும்.
ராணுவத்தின் உதவியுடன் அணையை நிர்வகிக்கும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ராணுவத்தின் உதவியை நாடுவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்விஜயகாந்த்.