ஓசூர் அருகே லாரி கவிழ்ந்து 18 பேர் பலி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலைச் சரிவில் லாரி கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர்பரிதாபமாக பலியானார்கள்.
ஓசூர் அருகே உள்ள ஏரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 88 பேர், ஓகனேக்கலில் நடந்த ஈமச் சடங்கு நிகழ்ச்சியில்கலந்து கொள்வதற்காக லாரி ஒன்றில் சென்றனர். ஈமச் சடங்கை முடித்து விட்டு அஞ்செட்டியில் உள்ளகத்திரிப்பள்ளம் என்ற காட்டுப் பகுதி வழியாக ஊருக்குத் திரும்பினர்.
அஞ்செட்டி, மலைப் பாங்கான வனப் பகுதியாகும். அப்பாதையில் லாரி வந்து கொண்டிருந்தபோது பெரியபாறையில் மோதி பள்ளத்தில் உருண்டது. இதில் லாரியில் பயணித்த 18 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவஇடத்திலேயே பலியாயினர். 60 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் ஓசூர் மற்றும் அஞ்செட்டியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் பலியான 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ்பாபு, காவல்துறைக் கண்காணிப்பாளர் தேன்மொழி உள்ளிட்டோர் அங்குவிரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி:
இதற்கிடையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர்கருணாநிதி உயிரிழந்த 18 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவியும், படுகாயம் அடைந்துபெங்களூரூரில் சிகிச்சை பெற்று வரும் 16 பேருக்கு தலா 35,000 சிகிச்சை உதவியாகவும், ஓசூர் மற்றும்அஞ்செட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 54 பேரின் குடும்பங்களுகு தலா ரூ.15,000 நிதியுதவிவழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications