தமிழக அரசின் நிதானம்: பாராட்டும் பாஜக
சென்னை:முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசின் நிதானப் போக்கு பாராட்டுக்குரியது என தமிழக பாரதீயஜனதா தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபரிகளிடம் கூறியதாவது,
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு ரூ. 7 லட்சம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.அதே போல் கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தலா ரூ. 7 லட்சம் வழங்க வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய உள்ளாட்சி நிலைகளை ஆய்வு செய்து அதை இலங்கையில்அமல்படுத்தப்போவதாக கூறியுள்ளார். அவரை எதற்காக இங்கே அழைத்தார்கள் என்று புரியவில்லை.
இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசும் விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இலங்கை பிரச்சனையில் ராணுவரீதியாக இந்தியா தலையிடுவதை பாஜக விரும்பவில்லை. ஆனால் அப்பாவிதமிழர்கள் பாதிக்கப்படும்போது இந்தியா கைகட்டி வேடிக்கை பார்ப்பது சரியில்லை என்பது பாஜகவின் கருத்து.
முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசின் நிதானப் போக்கு பாராட்டுக்குரியது. 29ம் தேதி நடைபெறும்பேச்சுவார்த்தையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் உறுதியாக இருந்து அதை அமல்படுத்த வேண்டும்என்றார்.