மீண்டும் பாஜகவுக்கு திரும்புகிறார் விஜயசாந்தி?
நகரி:பாஜகவிலிருந்து விலகி தல்லி தெலுங்கானா என்ற கட்சியை ஆரம்பித்த நடிகை விஜயசாந்தி மீண்டும்பாஜகவுக்கே திரும்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருந்து வந்த விஜயசாந்தி அந்தக் கட்சியிலிருந்து விலகி தல்லி தெலுங்கானாஎன்ற புதிய கட்சியை தொடங்கினார். தெலுங்கானாவின் விடுதலைக்காக பாடுபடப் போவதாக புதிய கட்சியைஆரம்பித்தபோது தெரிவித்திருந்தார் விஜயசாந்தி.
இந்த நிலையில் மீண்டும் பாஜகவுக்கு திரும்ப விஜயசாந்தி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இன்றுஎதிர்க்கட்சித் தலைவரும், மூத்த பாஜக தலைவருமான அத்வானியை விஜயசாந்தி சந்தித்துப் பேசவுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தெலுங்கான தனி மாநிலம் தொடர்பான தனி நபர் மசோதாவைகொண்டு வருவோம் என மூத்த பாஜக தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் பாஜகவில்இணைய விஜயசாந்தி முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
டெல்லியில் அத்வானியை இன்று சந்தித்துப் பேசிய பின்னர் தனது முடிவை நாளை விஜயசாந்தி அறிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது.