ட்யூஷனில் ஆபாசம்-மாணவிகள் புகார்
சென்னை:செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் இரவு 9 மணி வரை ட்யூஷன் வகுப்புகள்நடத்தப்படுவதாகவும், அப்போது ஆசிரியர்கள் மாணவிகளிடம் ஆபாசமாகபேசுவதாகவும் மாணவர்கள் குறை தீர்ப்புப் பிரிவுக்கு புகார் வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்களால் ஏற்படும்தொல்லைகள் குறித்து புகார் செய்ய குறை தீர்ப்புப் பிரிவை தமிழக அரசு புதிதாகஆரம்பித்துள்ளது. இதன் பொறுப்பாளராக பள்ளிக் கல்வி இணை இயக்குனர்ராஜராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவ, மாணவியர் தங்களது குறைகளை இந்தப் பிரிவுடன் தொடர்பு கொண்டுதொலைபேசியிலோ (எண் 044-28273591), நேரிலோ அல்லது தபால் மூலமோபுகார் தரலாம்.
நேற்று முதல் இப்பிரிவு செயல்படத் தொடங்கியுள்ளது. 2 நாட்களிலேயே 16 புகார்கள்வந்துள்ளன. பெரும்பாலானவை ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது, சரியானநேரத்திற்கு வகுப்புகளுக்கு வருவதில்லை, பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிசரியாக இல்லை என்பது உள்ளிட்ட புகார்கள்தான் வந்துள்ளன.
செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடம் குறித்து மட்டும் மட்டமான புகார்வந்துள்ளது. இங்கு தினமும் இரவு 9 மணி வரை வகுப்புகள் வைப்பதாகவும், இரவுநேரத்தில் நடக்கும் டியூஷன் வகுப்பின்போது ஆசிரியர்கள், மாணவிகளிடம்ஆபாசமாக பேசுவதாகவும் புகார் வந்துள்ளது.
இந்தப் புகார்களை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனராஜராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.