கருணாநிதி இன்று டெல்லி பயணம்
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் நாளை நடைபெறும்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லிக்கு செல்கிறார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் கேரள முதல்வருடன் பேசசென்னையில் சமீபத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில்,தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக குழுவும், கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில்அம்மாநிலக் குழுவும், மத்திய அரசின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் தலைமையிலானகுழுவும் பங்கேற்கிறது.
பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார். ஏற்கனவேபொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு சென்று விட்டார்.
கருணாநிதியுடன் இன்று மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர்.மாலை 4.55 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் கருணாநிதி டெல்லிக்கு பயணமாகிறார்.
டெல்லி பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும்கருணாநிதி சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications