மத்திய போலீஸ் பாதுகாப்பு-கேரளா எதிர்ப்பு
கொல்லம்:முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை கேரளா ஏற்காது என அம்மாநிலநீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு அத்துமீறி நடந்து கொள்வதாலும், அங்குள்ள தமிழகபொதுப்பணித்துறையினரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருப்பதாலும் அணை பாதுகாப்புப் பணியைகேரள போலீஸாரிடமிருந்து மாற்றி,மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசைக் கோரியுள்ளது.
இதுகுறித்து கொல்லத்தில் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட மாநில அரசு கோரினால்மட்டுமே மத்திய படைகளை மத்திய அரசு அனுப்படியும். கேரள அரசு அதுபோன்ற கோரிக்கையை விடுக்காது.
முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்திற்குள் இருக்கிறது. எனவே அந்த அணையின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது கேரள அரசின் கடமை. அந்த வகையில் தங்களது கடமையை கேரள போலீஸார் சிறப்பாகசெய்துவருகிறார்கள். தொடர்ந்து அவர்களே அணை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்றார் பிரேமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications