மும்பை குண்டு வழக்கு: சஞ்சய் தத் குற்றவாளி
![]() |
மும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்தி நடிகர் சஞ்சய் தத் குற்றவாளி எனமும்பை தடா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
1993ம் ஆண்டு மும்பை நகரில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில்நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வழக்குதொடரப்பட்டது. அதில் சஞ்சய் தத்தும் ஒருவர்.
ஏ.கே.56 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நீண்ட காலத்திற்குப்பிறகு தற்போது படிப்படிாயக தீர்ப்பு வெளியாகி வருகிறது.
இன்று சஞ்சய் தத் மீதான குற்றச்சாட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பையொட்டி சஞ்சய் தத் தனதுகுடும்பத்தினர், திரையுலகினர் புடை சூழ தடா நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார். சஞ்சய் தத் தொடர்பானவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 7 பேரும் வந்திருந்தனர்.
பின்னர் நீதிபதி கோடே தனது தீர்ப்பை அறிவித்தார். சஞ்சய் தத் மீதான சதி வழக்கிலிருந்து அவரைவிடுவிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அவர்குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தார். தண்டனை குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிஅறிவித்தார்.
தீர்ப்பைக் கேட்டவுடன் சஞ்சய் தத் கண்கள் கலங்கிக் காணப்பட்டார். அவரை குடும்பத்தினர் ஆறுதல் படுத்தினர்.பின்னர் அங்கிருந்து சஞ்சய் தத் வெளியேறினார்.
இதன்மூலம் மும்பை குண்டு வெடிப்பு சதியில் சஞ்சய் தத்துக்கு தொடர்பில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக அவருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைதரப்படலாம். ஆனால், ஏற்கனவே 18 மாதங்கள் அவர் சிறையில் இருந்துவிட்டதால் மொத்த தண்டனைக்காலத்தில் 18 மாதங்கள் கழிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சஞ்சய்தத் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து மும்பையில் பரபரப்பு நிலவுகிறது. மும்பைதொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 86 பேர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications