42 ரயில்களின் வேகம் அதிகரிப்பு-நேரம் மாற்றம்
சென்னை:டிசம்பர் 1ம் தேதி முதல் 42 ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், 10 ரயில்களைசூப்பர்ஃபாஸ்ட் ரயில்களாகவும் மாற்ற தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய ரயில்வே காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை இந்தகால அட்டவணை அமலில் இருக்கும்.
சென்னை சென்டிரல்-ஹெளரா இடையிலான மெயில், கன்னியாகுமரி-ஹெளராவாராந்திர எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-ஹெளரா வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னைசென்டிரல்-பெங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், குவஹாத்தி-திருவனந்தபுரம் வாராந்திரஎக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களாகமாற்றப்படவுள்ளன.
மேலும் 20 ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி சென்னை-பெங்களூர் இடையிலான லால் பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல்மாலை 3.30 மணிக்கு பெங்களூருக்கு கிளம்பிச் செல்லும்.
சென்னை-டெல்லி இடையிலான ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் 4.30 மணிக்குப் பதில் இரவு7.15 மணிக்குப் புறப்படும். சென்னை-மைசூர் இடையிலான காவேரி எக்ஸ்பிரஸ்இரவு 9.45 மணிக்கு புறப்படும். சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 5.30மணிக்கு புறப்படும் எனவும் ரயில்வே கால அட்டவணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications