பிபிசி தலைவரான மதுரை டாக்டர் சித்ரா
லண்டன்:பிபிசி தொலைக்காட்சி மற்றும் வானொலியின் தாற்காலிக தலைவராக மதுரையில் பிறந்து வளர்ந்த டாக்டர் சித்ராபரூச்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பிபிசியின் தலைவராக இருந்த மைக்கேல் கிரேட் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டிடிவி நிறுவனமான பிரிட்டனின் ஐடிவியில் இணைந்துவிட்டார். சமீபகாலமாக தடுமாற்றத்தில் இருந்து வரும்பிபிசிக்கு இது பெரிய அடியாகக் கருதப்படுகிறது.
இந் நிலையில் இந்தப் பதவிக்கு மிகச் சிறந்த நபரைத் தேடும் பணியில் பிபிசியும் பிரிட்டிஷ் அரசும் இறங்கின.பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் சித்ராவின் நியமனம் இறுதி செய்யப்பட்டது.
சித்ராவின் நியமனத்துக்கு பிரிட்டிஷ் அரசும் பிபிசியும் அனுமதி தந்துவிட்டன. ஜனவரி முதல் இந்த பொறுப்புக்குவருவார் சித்ரா. தாற்காலிகமாக இந்தப் பதவியில் நியமிக்கப்படும் சித்ரா, புதிய தலைவர் தேர்வு செய்யப்படும்வரை பிபிசியை வழி நடத்துவார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நேயர்களைக் கொண்ட பிபிசி தொலைக்காட்சிக்கும் வானொலிக்கும்தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் சித்ரா தான் என்பது குறிப்பிடத்தக்கது. 4 பில்லியன் பட்ஜெட் கொண்டபிபிசிக்கு உலகம் முழுவதும் 26,000 நிருபர்களும் கேமராமேன்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும்ஊழியர்களும் உள்ளனர்.
மதுரையில் பிறந்த சித்ரா, 1972ல் பிரிட்டனில் குடியேறினார். இரத்தம் தொடர்பான ஆராயச்சிகளில் ஈடுபட்டமிகச் சிறந்த இரத்தவியல் நிபுணரான சித்ராஸ வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் மருத்துவமனையில் ரத்தமாற்றுப் பிரிவில் பணியாற்றினார்.
1996ல் தனது மருத்துவப் பணியில் இருந்து செய்தித் தொடர்பு துறை பக்கம் கவனத்தைத் திருப்பினார் சித்ரா.பிபிசியின் வடக்கு அயர்லாந்து பிரிவில் 2003ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
இப்போது பிரிட்டனின் பொது மருத்துவக் கவுன்சிலின் ஒரு பிரிவின் தலைவராக உள்ளார். 2001ம் ஆண்டு முதல்2003ம் ஆண்டு வரை வடக்கு அயர்லாந்தின் டெலிவிஷன் கமிஷன் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.












Click it and Unblock the Notifications