இலங்கைக்கு ராணுவ உதவி கிடையாது: இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இலங்கை இனப் பிரச்சினை தீர விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காணவேண்டும். இதுதொடர்பாக இந்தியாவிடமிருந்து ராணுவ உதவியை எதிர்பார்க்க வேண்டாம் என இலங்கைஅதிபர் ராஜபக்ஷேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ராஜபக்ஷே நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போதுஇலங்கை இனப் பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மன்மோகன் சிங்கிடம், ராணுவ ரீதியிலான உதவியை ராஜபக்ஷே கேட்டதாக தெரிகிறது. மேலும், இலங்கைஇனப் பிரச்சினை தொடர்பாக தற்போது இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்விளக்கியுள்ளார்.

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக விவாதித்து வருவதாகவும், விரைவில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டி இது இறுதி செய்யப்படும் எனவும், டிசம்பர் மாத மத்தியில் அதிகாரப் பகிர்வுத் திட்டம்தயாராக விடும் எனவும் சிங்கிடம் ராஜபக்ஷே விளக்கினார்.

தமிழர் பிரச்சினை தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் ராஜபக்ஷே பேசியபோது, ராணுவ உதவி குறித்தே அதிகம்பேசியுள்ளார். ஆனால் இந்தியாவிடமிருந்து ராணுவ உதவியை எதிர்பார்க்க வேண்டாம், பேச்சுவார்த்தைகள்மூலமாக அரசியல் தீர்வு காண இலங்கை அரசு தீவிரமாக முயல வேண்டும் என்பதை ராஜபக்ஷேவிடம்மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல கூட்டு ரோந்து குறித்த இலங்கையின் கோரிக்கை குறித்தும் பேச்சுவார்த்தையில் முக்கியமாகவிவாதிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பிரதமர், ராஜபக்ஷே சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறுகையில்,இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் முக்கியமாக விவாதித்தனர். அதுதவிர இரு தரப்புவிவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.இலங்கை அமைதிப் பிரச்சினையைப் பொருத்தவரை அமைதியான, அரசியல் தீர்வையே இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதை அதிபரிடம், பிரதமர் எடுத்துரைத்தார்.

இலங்கையில் உள்ள அனைத்து இனத்தினரும் அமைதியான சூழலில் ஒருங்கிணைந்து வாழ அரசியல் தீர்வேசரியானது என்பதை பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பிரச்சினையின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக பிரதமர், அதிபர்இடையே நடந்த விவரங்களை முழுமையாக வெளியிட இயலாது.

இந்த சந்திப்பின்போது புதிதாக எந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றார் சர்னா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+