For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர் அடி: எலி மருந்து சாப்பிட்ட மாணவன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியையும் தொடர்ந்து அடித்துத் திட்டியதால் வெறுப்படைந்த 9வது வகுப்புமாணவன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே உள்ள மதுரவாயல் கம்பர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் சுனில் திவாகரன்.ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9வது வகுப்பு படிக்கிறான்.

கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் திவாகரன் வீக் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக 2 மாதங்களுக்கு முன்புதிவாகரனை வகுப்பு ஆசிரியர் கண்டித்து அடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பும் இதே காரணத்திற்காகஆசிரியர் அடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திவாகரனின் பெற்றோரை வரவழைத்த தலைமை ஆசிரியை உமா, இனிமேல் இவனைபள்ளிக்கூடத்தில் அனுமதிக்க முடியாது. டிசியை வாங்கிச் செல்லுங்கள் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.அவரை சமாதானப்படுத்திய பெற்றோர், இனிமேல் நன்றாகப் படிப்பான் என்று கூறி பள்ளியில் விட்டுச்சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை திவாகரனை அழைத்த தலைமை ஆசிரியை, ஒழுங்காக படிப்பதில்லை என்று கூறிசரமாரியாக அடித்துள்ளார். இதனால் திவாகரன் வெறுப்படைந்தான். பள்ளிக்கூட இடைவேளை நேரத்தில்வெளியே சென்ற அவன் ஒரு கடையில் எலிக்கு வைக்கும் மருந்தை வாங்கி சாப்பிட்டு விட்டு வகுப்பில் போய்அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தான். உடனடியாக அவனை அருகில் உள்ளமருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மாணவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகடாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

திவாகரனின் சகோதரி திவ்யா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவரும்ஆசிரியர் அடித்ததால்தான் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் திவாகரனும் அதேகாரணத்தால் தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடி வருவதைப் பார்த்து அவனது பெற்றோர் துடித்துப்போய் கதறி அழுத வண்ணம் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X