தமிழக உள்துறை செயலாளர் மாலதி
சென்னை:தமிழக உள்துறைச் செயலாளராக மாலதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை உள்துறைச் செயலாளராக இருந்த பவன் ரெய்னா ஓய்வு பெற்றதையடுத்து அந்தப் பதவியில் மாலதிநியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவர் வணிக வரித்துறை சிறப்பு ஆணையராக இருந்து வந்தார்.
கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை செயலாளராக இருந்தார் மாலதி. அடுத்து வந்த ஜெயலலிதாஆட்சியில் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது மேம்பால ஊழல் வழக்கு போடப்பட்டபோது மாலதி மீதும்வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் அதிமுக ஆட்சியில் மாலதி ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன்வணிக வரித்துறையின் சிறப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.
![]() |
அதே போல இதுவரை தமிழக நலத்துறையில் திட்ட இயக்குனராக இருந்த ஜேக்கப், வணிக வரித்துறைஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று பதவி விலகிச் செல்லும் பவன் ரெய்னா முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாகசந்தித்துவிட்டு விடை பெற்றார்.













Click it and Unblock the Notifications