மீண்டும் பாஜகவிலா? நோ சான்ஸ்-விஜயசாந்தி
ஹைதராபாத்:பாஜகவில் மீண்டும் சேரும் திட்டம் இல்லை. அப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றுதிடிகையும், தல்லி தெலுங்கானா கட்சியின் தலைவருமான விஜயசாந்தி கூறியுள்ளார்.
முன்பு பாஜகவில் இருந்தவர் லேடி சூப்பர் ஸ்டாரான விஜயசாந்தி. அதன் பின்னர் தெலுங்கானா பிரச்சினையில்பாஜக அக்கறை காட்டவில்லை என்று கூறி அதிலிருந்து விலகி தல்லி தெலுங்கானா (அதாவது தாய்தெலுங்கானா) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அத்வானியை சந்தித்துப்பேசினார். இதனால் விஜயசாந்தி மீண்டும் பாஜகவுக்குத் திரும்பப் போவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அதை மறுத்துள்ளார் விஜயசாந்தி. ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜகவில்நான் 9 ஆண்டுகாலம் இருந்தேன். தெலுங்கானா தனி மாநிலப் பிரச்சினையில் கட்சியுடன் எனக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அதிலிருந்து விலகி தனிக் கட்சி கண்டேன்.
தெலுங்கானாவின் சுதந்திரத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். நான் அத்வானியை சந்தித்தது,தெலுங்கானா தொடர்பாக சில ஆலோசனைகளை நடத்தத்தான். வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நான் பாஜகவில்மீண்டும் சேரப் போவதாக சிலர் வதந்தி பரப்பி விட்டனர்.
பாஜகவில் இணையும் திட்டமே என்னிடம் இல்லை. கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக உள்ளேன்.விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என்றார் விஜயசாந்தி.












Click it and Unblock the Notifications