அம்பேத்கர்: நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு
டெல்லி:உ.பி. மாநிலம் கான்பூரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தைநாடாளுமன்றத்தில் பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுப்பி பிரச்சினைகிளப்பியதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்தன.
கான்பூரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதால் உத்தரப் பிரதேசத்தில்தொடங்கிய வன்முறை மகாராஷ்டிர மாநிலத்திற்குப் பரவியது. மகாராஷ்டிரத்தில்பெரும் கலவரம் மூண்டது. நேற்று நடந்த பெரும் கலவரத்தில் 2 ரயில்கள் தீவைத்துஎரிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பேருந்துகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.
இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வீச்சும், போராட்டமும் தொடர்ந்துநடந்து வருகிறது.
இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மக்களவை கூடியபோது,பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக உறுப்பினர்கள் இதுகுறித்து விவாதிக்க கேள்வி நேரத்தைஒத்திவைக்க வேண்டும் என கோரின கோஷமிட்டனர்.
ஆனால் சபாநாயகர் அனுமதி தர மறுத்ததால், இரு கட்சியினரும் பெரும் அமளியில்ஈடுபட்டனர். இதனால் சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோலராஜ்யசபாவும் 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசுகையில், உ.பி.மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுதத வேண்டும் என ஆவேசமாககோஷமிட்டார்.
அவர்களை சமாதானப்படுத்திய சபைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் இதுகுறித்துவிசாரிக்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்றுகோரினார். ஆனால் அதில் சமாதானமடையாத பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் உ.பி.அரசைக் கலைக்க வண்டும். சிலை உடைப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நிடத்தவேண்டும் என்று கோரினர்.
அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் சுரேஷ் பச்செளரி சிலைஉடைப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆனால்சபையில் நிலவிய அமளியால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்துராஜ்யசபை ஒத்திவைக்கப்பட்டது.