மணக்கோலத்தில் பரீட்சை எழுதிய மாணவி

Subscribe to Oneindia Tamil

Selvi with Sathish Kumarபுதுச்சேரி:புதுச்சேரியில் கல்யாணம் செய்து கொண்ட ஒரு மணி நேரத்தில் புத்தம் புது கணவருடன் பரீட்சை எழுத கல்லூரிமாணவி வந்ததால் கல்லூரி வளாகத்தில் வியப்பு கலந்த பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் படித்து வருபவர் செல்வி. கடலூரைச் சேர்ந்த இவருக்கும், புதுவைமுத்தியால்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது.

இவர்களது திருமணம் நேற்று காலை முத்தியால்பேட்டையில் நடந்தது. கல்யாணம் முடிந்ததும் மணமக்கள்இருவரும் வேகம் வேகமாக பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டு காரில் செல்வியின் கல்லூரிக்குவிரைந்தனர். செல்விக்கு நேற்று பரீட்சை இருந்தது.

இதனால்தான் கல்யாணம் முடிந்த கையோடு கணவரையும் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தார் செல்வி.கல்லூரிக்குள் புதுமண ஜோடி ஒன்று வேகம் வேகமாக வருவதைப் பார்த்ததும் அங்கிருந்த மாணவிகளும்,ஆசிரியைகளும் வியப்படைந்தனர்.

செல்வியை அடையாளம் கண்டுகொண்ட அவரது தோழிகள் வேகமாக வந்து கைகுலுக்கி வரவேற்றனர். பின்னர்தனது கணவரை ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு பரீட்சை ஹாலுக்கு விரைந்தார் செல்வி.

செல்வி பரீட்சை எழுதி விட்டு வரும் வரை கல்லூரிக்குள் படு வெட்கமாக உட்கார்ந்திருந்தார் பொறுப்பானகணவரான சதீஷ்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+