ஜெ மாஜி வளர்ப்பு மகனுக்கு பிடிவாரன்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சின்ன எம்ஜிஆர் நற்பணி மன்றத்தை நடத்தி வருகிறார்.தானும் ஒரு கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு தன்னை சின்ன எம்ஜிஆர் என்று போஸ்டர் அடித்து ஒட்டிஅரசியல் நடத்தி வருகிறார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கையை இழந்த சுதாகரன் மீது அதிமுக ஆட்சியில் வழக்குகள் பாய்ந்தன. இந்த நற்பணிமன்றத்தின் பணத்தை கையாடல் செய்ததாக அதன் பொதுச் செயலாளர் கோபு ஸ்ரீதர் என்பவரை துப்பாக்கியால்மிரட்டியதாக 2001ம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் சுதாகரன் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அவரது வீட்டில் இருந்து 16 கிராம் ஹெராயினைகைப்பற்றியதாக வழக்கு போட்டனர். இது தொடர்பாக சுதாகரன் மீது போதை பொருள் தடுப்பு சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குவிசாரணைக்கு சுதாகரன் 2 முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நேற்றைய விசாரணையின் போதும் அவர்ஆஜராகவில்லை.

அவர் சார்பில் விலக்களிக்கத் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துஉத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+