குமாரசாமி எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

மைசூர்:கர்நாடக மாநிலம் சாமுண்டீஸ்வரி சட்டசபைத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்தது.

2004ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தேவே கெளடாவின் மதசார்பற்றஜனதாதளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார் சித்தராமையா. இதையடுத்து அமைந்தகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசில் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தனது மகன் குமாரசாமியை முதல்வராக்க தேவே கெளடாமுயன்றபோது எதிர்ப்புத் தெரிவித்தார் சித்தராமையா. இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் கெளடா.இதைத் தொடர்ந்து காங்கரஸ் கட்சியில் இணைந்த சித்தராமையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந் தேர்தலில் 14 பேர்போட்டியிடுகிறார்கள். இத் தேர்தலில் 14 பேர் போட்டியிட்டாலும் காங்கிரஸ் வோட்பாளர் சித்தராமையா,மதசார்பற்ற ஜனதாதளம் வேட்பாளர் சிவபசப்பவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இத் தொகுதியில் பாஜகவும் போட்டியிட திட்டமிட்டது. இதனால் கெளடா-பாஜக இடையே மோதல் ஏற்பட்டது.இறுதியில் தொகுதியை கெளடா கட்சிக்கு பாஜக விட்டுத் தந்தது.

இடைத் தேர்தலையொட்டி நடந்த பிரசாரத்தின் போது காங்கிரஸ், ஜனதா தளம் கட்சியினருக்கும் இடையேபலமுறை மோதல் ஏற்பட்டது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் பிரசாரம் முடிவடைந்தது.

தமிழக ஸ்டைலில் வாக்காளர்களுக்கு டிபன் கேரியர் உள்ளிட்ட அன்பளிப்புகளை அள்ளிவிட்டார் முதல்வர்குமாரசாமி. மேலும் பணமும் மதுவும் புகுந்து விளையாடியது.

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குமாரசாமிக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமி, எதிர்கட்சி தலைவர் தரம்சிங் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தொகுதியைவிட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால், குமாரசாமி அங்கு ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருந்து தேர்தல் வேலைகளைப் பார்த்தார். இதைபத்திரிக்கையாளர்கள் அறிந்து படம் எடுத்தபோது காரில் ஏறி ஓடினார். ஒரு முதல்வரே தப்பியோடியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் இன்று காலை 7 வாக்கு பதிவு தொடங்கியது. மின்னனு எந்திரம்மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

இந்தத் தேர்தலின் எதிரொலி மாநில பாஜக-ஜனதா தள கூட்டணியின் ஆட்சியிலும் எதிரொலிக்கும் என்பதால்இந்தத் தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் உத்திரஹள்ளிக்கு அடுத்த 2வது பெரிய சட்டசபை தொகுதியாக கருதப்படுவது சாமுண்டீஸ்வரிதொகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

6,000 போலீசார் குவிப்பு:

தொகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் அமைதியான முறையில் நடைபெற 7 கம்பெனி துணை ராணுவ போலீசார் வரவழைக்கப்படுள்ளனர்.மேலும் கர்நாடக ஆயுதப்படை, ரிசர்வ் போலீசார் உள்பட 6,000 போலீசார் குவிக்கப்பட்டள்ளனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+