சட்டசபையில் அதிமுகவை தாக்கிய காங் எம்எல்ஏ
சென்னை:அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை என காங்கிரஸ் எம்எல்ஏ கோவை தங்கம்சட்டசபையில் கூறினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர்.
கேள்வி நேரத்தில் கோவை தங்கம் பேசியதாவது:
விவசாயிகள் காலையில் பத்திரிகை படிக்க நேரம் கிடைப்பதில்லை. எனவே அரசின் திட்டங்களை விவசாயிகள்தெரிந்து கொள்ள பழையபடி திரைப்படமாக தயாரித்து வெளியிட்டால் தான் அரசு திட்டங்கள் கிராமப்புறவிவசாயிகளை சென்றடையும்.
ரூ. 7,000 கோடி கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளுக்கு மாபெரும் நன்மை செய்திருக்கிறார் நமது முதல்வர்.பயிர்க்கடன் வட்டியை 7 சதவீதமாகக் குறைத்திருக்கிறார். விவசாயிகளைப் பாதுகாக்க நல்ல பல திட்டங்களைதீட்டி இருக்கிறார். அதிமுக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் வேலுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், விஸ்நாதன் மற்றும் பாண்டுரங்கன்உள்பட பல அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீண்டும் கோவை தங்கம் பேசுகையில், கிலோ அரிசி 2 ரூபாய், இலவச கலர் டிவி, இலவச கியாஸ் இணைப்பு எனநல்ல பணிகளை கலைஞர் அரசு செய்து கொண்டிருக்கிறது. காமராஜர் ஆட்சியில் அணைகள் கட்டப்பட்டன.பள்ளிகள் திறக்கப்பட்டன, சத்துணவு போடப்பட்டது.
மக்களுக்கு பல நல்ல பணிகள் செய்தும், அந்த பணிகள் பற்றி மக்களுக்கு தெளிவாக தெரிவிக்காததால் தான்நாங்கள் ஆட்சியில் இல்லாமல் இருக்கிறோம். இன்று சிறப்பாக ஆட்சி நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவால்பாறைக்கு கல்லூரி கேட்டோம். கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அந்த கோரிக்கை நிறைவேறியுள்ளதுஎன்றார்.
தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று கத்தினர்.
அப்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி எழுந்து. உறுப்பினர் கோவை தங்கம் அவர்களே, கேள்வி நேரத்தில்கேள்வி கேளுங்கள் குற்றம் சொல்லாதீர்கள். நலத்திட்டங்களை திரைப்படமாக தயாரித்து காண்பிக்க முடியுமாஎன்று கேட்கிறார். திரைப்படமாக காட்டினால் தியேட்டருக்கு சென்று தான் மக்கள் பார்க்க முடியும். இந்தக்குறையை நீக்க வீடியோ படமாக தயாரித்து மக்கள் கூடும் இடத்திற்கெல்லாம் சென்று நாங்கள் ஒளிபரப்பிவருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications