கும்பகோணம் தீ: குழந்தைகள் நினைவுத் தூண்
தஞ்சாவூர்:கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவாக நினைவுத் தூண் நிறுவுமுடிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு தனியார் பள்ளி ஒன்றில் நடத்த தீ விபத்தில் 94 குழந்தைகள்உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளுக்கு நினைவிடம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில்நடந்தது. இக்கூட்டதிற்கு கலெக்டர் விஜயராஜ்குமார் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் நினைவகத்தின் மாதிரியாக கல்விக் கொழுந்து என்னும் மாதிரி வடிவமைப்பு தேர்வுசெய்யப்பட்டது. இந்த மாதிரி வடிவை சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
இக்கூட்டத்திற்கு பின் ஆட்சியர் விஜயராஜ்குமார் கூறுகையில்,
உத்தேச நினைவிடத்தில் 2 டன் எடையில் சுமார் ரூ. 29 லட்சம் செலவில் நினைவுத் தூண் அமைக்கவும், ரூ. 15லட்சம் செலவில் குழந்தைகள் விளையாட்டு திடல், மற்றும் இதர கட்டிடங்கள், புல்வெளிகள் அமைக்கவும் முடிவுசெய்யப்படுள்ளது.
மேலும் நினைவு தூண்கள் சாதாரண கட்டிடப் பணியை போன்று இல்லை என்பதால், சென்னை அரசுக் கவின்கலைக்கல்லூரி வாயிலாக செய்யலாம் என பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் கருத்து தெரிவித்தார்.அதன்படி அரசுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications