தெ.ஆப்பிரிக்க: ஜாகிர்கானை தாக்கிய ரசிகர்
செஞ்சூரியன்:தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டி முடிவில் இந்திய பந்து வீச்சாளர் ஜாகிர் கானை, தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய ரசிகர் ஒருவர் அடித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
![]() |
5வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியதும், ஒருஇந்திய ரசிகர், இந்திய வீரர்களின் டிரஸ்ஸிங் அறைக்கு சென்றார்.
அங்கு ஜாகிர் கான் உள்ளிட்ட இந்திய வீரர்களைப் பார்த்து சத்தம் போட்டு திட்டினார். பின்னர் ஒரு பாட்டிலைஎடுத்து ஜாகிர் கான் மீது அவர் வீசி எறிந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பலத்த பாதுகாப்பையும் மீறி ரசிகர் ஒருவர் இந்திய வீரர்களின் டிரஸ்ஸிங் அறைக்குச் சென்று பாட்டிலை வீசிரகளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி நிர்வாகம், தனது அணி வீரர்களுக்கானபாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, போட்டியின்போது அந்த ரசிகர், இந்திய வீரர்கள் குறித்து மோசமாக விமர்சித்ததாகவும், அதனால்கோபமடைந்த ஜாகிர் கான் அந்த ரசிகரைத் திட்டியதாகவும், இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த ரசிகர்வீரர்கள் அறைக்குப் போய் ஜாகிர் கான் மீது பாட்டில் வீசியதாக போலீஸார் கூறுகிறார்கள்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.













Click it and Unblock the Notifications