பெண்ணிடம் சில்மிஷம்: மன்மதன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் செக்ஸ்சில்மிஷம் செய்த மருத்துவமனை ஊழியரான மதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

வேப்பேரி வி.வி. கோவில் தெருவில் தனியார் அறக்கட்டளை மருத்துவமனை உள்ளது. அங்கு ஏழைஎளியோருக்கு இலவச மருத்துவம் பார்க்கப்படுகிறது. இலவச மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்படுகின்றன.

இங்கு பர்வீன் என்ற 20 வயதுப் பெண் சிகிச்சை பெற வந்தார். இவரது கணவர் அக்பர் பாஷா, கறிக் கடைவைத்துள்ளார். பர்வீன் தலைவலிக்காக சிகிச்சை பெற வந்திருந்தார்.

அப்போது மருத்துவமனை ஊழியர் மதன் என்பவர் பர்வீனை பரிசோதித்தார். உங்களுக்கு மார்பில் சளி அதிகம்உள்ளது என்று கூறிய மதன், பர்வீனின் மார்பில் கை வைத்து அழுத்தியுள்ளார். இதனால் எரிச்சலுற்ற பர்வீன்கையை பட்டென்று தட்டியுள்ளார்.

இதையடுத்து கண்ணைப் பார்க்க வேண்டும் என்று கூறி ஒரு கருவியை எடுத்து அவரது கண்ணுக்கு நேராகவைத்துக் கொண்டு, தனது முகத்தை பர்வீனின் முகத்திற்கு படு நெருக்கமாக வைத்துக் கொண்டு கன்னத்தில்உரசியுள்ளார். மதனின் பரிசோதனையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பர்வீன் அவரைத் தள்ளி விட்டு விட்டுகூச்சல் போட்டபடி வெளியே வந்தார்.

தனது கணவரிடம் வந்து மதனின் சேஷ்டைகளைக் கூறியுள்ளார். இதையடுத்து பர்வீனை அழைத்துக் கொண்டுவேப்பேரி காவல் நிலையம் வந்த அக்பர் பாஷா மதன் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணைமேற்கொண்ட போலீஸார் மதனைப் பிடிக்க மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் அவர் ஓடி விட்டார்.

பின்னர் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அங்கிருந்த மதனைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+