சென்னை: ரன்வேயில் ஊடுருவிய பெண்-நக்சலா?
சென்னை:சென்னை விமான நிலையத்தில் நிலவும் கெடுபிடியான பாதுகாப்பு அரண்களைத் தாண்டி விமானம் அருகேசென்ற ஆந்திரப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் நக்சலைட்டா என்பது குறித்து விசாரணைநடந்து வருகிறது.
இன்று பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் என்பதால் சென்னை விமான நிலையத்தில், பன்மடங்கு பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. தீவிரக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் பன்னாட்டு முனையம் வழியாக, பல்வேறுபாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி விமானம் நிற்கும் ரன் வே வரை போய் விட்டார்.
அவர் ஒரு விமானத்தை நெருங்கியபோது பார்த்து விட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் அங்குவிரைந்து சென்று அப்பெண்ணைப் பிடித்தனர். அவர் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில் அவரது பெயர் ஜெடி என்பது தெரிய வந்தது. அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர் நக்சலைட்அமைப்பைச் சேர்ந்தவரா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அப்பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.