சட்டசபை தீர்மானம்: அதிமுக வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்விஅடைந்ததாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர்ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:

சபாநாயகர் ஆவுடையப்பனை பதவியிலிருந்து நீக்க அவர் மீது கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி அதிமுக சார்பில்நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிமுக எம்எல்ஏ. தம்பித்துரை இத்தீர்மானத்தைக்கொண்டு வந்தார்.

மறு நாளே இத்தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தீர்மானம் தோல்விஅடைந்ததாக சட்டசபை முடிவு செய்தது.

இதுபோன்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டால், அதுகுறித்துமற்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 14 நாட்களுக்குப் பிறகே தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தின் 179 (சி) பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால தீர்மானம் கொண்டு வரப்பட்ட அடுத்த நாளே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனவேதீர்மானம் தோல்வி அடைந்ததாக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரியுள்ளார் பன்னீர் செல்வம்.

இம்மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+