எடிஎப் கொடுமை-இழப்பீடு தர தமிழகம் ஒப்புதல்
டெல்லி:சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மனித உரிமைஆணைய பரிந்துரைப்படி இழப்பீடு வழங்க தமிழக மற்றும் கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளன.
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, தமிழக அரசின்தலைமைச் செயலாளர் திரிபாதி, கர்நாடக கூடுதல் தலைமைச் செயலாளர் ஏகே.அகர்வால், உள்துறை செயலாளர்ராமகிஷ்ணன் ஆகியோர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தங்களது மாநில கருத்துகளை தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக நீதிபதி சதாசிவம் கமிவட்டி அளித்த பரித்துரைகள்குறித்து பாதிக்கப்பட்டோர் மற்றும் மாநில அரசுகளிடம் மனித உரிமை ஆணையம் கருத்து கேட்டது. பின்னர்பாதிக்கப்பட்டோர்களின் கருத்துக்கள் தொடர்பாக மாநில அரசுகள் பதில் கருந்துக்களை தெரிவிக்கும்மாறுகேட்டது.
இந்நிலையில் இரு மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் வந்து தங்களது கருத்துக்களை மனித உரிமைஆணைய பொறுப்புத் தலைவர் நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்னிலையில் கூறினர். பின்னர் ஆணையத்தின்பரிந்துரைப்படி, இழப்பீடு வழங்க அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அடுத்த பத்து நாள்களுக்குள் ஆணையம் மீண்டும் கூடி ஒவ்வொருக்கும் வழங்க வேண்டிய இழப்பீடு குறித்துமுடிவெடுக்கப்படும். மேலும் சதாசிவம் கமிஷன் அறிக்கையில் 198 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகள் குறித்தும் ஆணையம்முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி போராட்டம் நடத்தி வந்த இந்திய தேசியமகளிர் சம்மேளத் தலைவர் ஆன்னிராஜா நேற்று சிவராஜ் பாட்டீலைச் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், எனது வாழ்க்கையில் இன்று மிகவும் முக்கியமான நாள்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது மிகப் பெரிய வெற்றி என்றார்.
அதிமுக அரசு இருந்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தர சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.