For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள முதல்வரை சந்திக்க சிபிஐ முடிவு

By Staff
Google Oneindia Tamil News

தேனி:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தனை சந்தித்துப் பேச இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கிளை முடிவு செய்துள்ளது.

தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து விட்டது. ஆனால்இதை அமல்படுத்தவதற்கு கேரள அரசு மறுப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. தேசியஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு தினசரி காய்கறிகள், பால், இறைச்சிக்கான மாடுகள், பூக்கள் உள்ளிட்டவைகொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் இயற்கை கொடுத்த நீரை கொடுக்க மறுப்பது நியாயமற்ற செயல்.

தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் பேசியுள்ளார். இது வன்மையாககண்டிக்கத்தக்கது. அணை பலமாக உள்ளது என்று மத்திய அரசு அனுப்பிய நிபுணர்கள் குழுவின் அறிக்கையின்அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வர் மற்றும் அங்குள்ள அரசியல் கட்சியினரை சந்தித்து தமிழகத்தின்உரிமையை நிலை நாட்டும் வகையில் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தி தீர்வு காண கேரளாவை நாங்கள்வலியுறுத்தவுள்ளோம் என்றார் பாண்டியன். ‘

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X