ஐ.டி. ஏற்றுமதி 30% அதிகரிக்கும்
கொல்கத்தா:நடப்பு நிதியாண்டில், தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து ஏற்றுமதி அளவு 27 முதல் 30 சதவீதம் வரைஅதிகரிக்கும் என நாஸ்காம் தலைவர் கிரண் கார்னிக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் அவர் கூறுகையில், ஐ.டி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைப் பிரிவு,பிபிஓ துறைகளில் ஏற்றுமதி அளவு முறையே 22 பில்லியன் மற்றும் 8.5 பில்லியன் டாலராக இருக்கும்.
இத்துறையில், இந்தியாவில் மொத்தம் 10.3 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். நடப்பு ஆண்டில் இதுவரை 1லட்சத்த 20 ஆயிரம் பேர் புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தகவல் தொழில்நுட்பம் சார்ந்தசேவைப் பிரிவில் 1 லட்சமாக உள்ளது.
2010ம் ஆண்டுக்குள் இத்துறையின் முதலீட்டு அளவு 60 பில்லியன் டாலராக இருக்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஐந்து புதிய ஐ.டி அறிவு நகரங்களை உருவாக்க வேண்டும். இங்கு வீட்டு வசதி,பள்ளிகள், கிளப்கள், அலுவலகங்கள் மற்றும் பிற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.அப்படி செய்து தந்தால் தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து லட்சம் பேர் நேரடி வேலை வாய்ப்பைப்பெறுவார்கள் என்றார் கார்னிக்.












Click it and Unblock the Notifications