For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரட்டைப் பதவி சர்ச்சை: தப்பினார் அன்புமணி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:ஆதாயம் தரும் பதவியை மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வகிக்காததால் அவரது பதவியைபறிக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறி விட்டது. இதனால் எம்.பி பதவி பறிபோகும் அபாயத்திலிருந்துஅவர் தப்பினார்.

மத்திய அமைச்சர் அன்புமணி, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக தலைவர் பதவியையும் வகித்துவருகிறார். ஆதாயம் தரும் பதவியை அன்புமணி வகித்து வருவதால் அவரது எம்பி பதவியைப் பறிக்கவேண்டும் என கூறி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உமேஷ் செகால் என்பவர் குடியரசுத் தலைவர் அப்துல் கலாக்குமனு அனுப்பினார்.

இந்த மனுவை தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பி வைத்தது. இந்த மனுவைப்பரிசீலித்த தேர்தல் ஆணையம், அன்புமணி மற்றும் செகாலை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது. இதைத்தொடர்ந்து தற்போது செகாலுக்கு தேர்தல் ஆணையம் பதில் அனுப்பியுள்ளது.

அதில், அமைச்சர் அன்புமணி வகித்து வரும் பதவியை ஆதாயம் தரும் பதவியாக கருத முடியாது. மத்தியசுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர்தான் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் தலைவராகஇருக்க முடியும். எனவே அவரது எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எம்பி பதவி பறிபோகும் அபாயத்திலிருந்து அன்புமணி தப்பியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X