கோவை, திருச்சியிலும் அண்ணா பல்கலை.
சென்னை:அண்ணா பல்கலைக்கழகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, கோவை, திருச்சியில் புதியதொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் என உயர் கல்வித்துறைஅமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இதுதொடர்பாக அவர் சட்ட மசோதாக்களை கொண்டு வந்தார்.மசோதாவைத் தாக்கல் செய்து அவர் பேசுகையில், 2001ம் ஆண்டு மாநிலபொறியியல் கல்லூரிகளின் இணைப்பு வகை பல்கலைக்கழகமாக அண்ணாபல்கலைக்கழகம் மாற்றப்பட்டது.
ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள 200க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளைநிர்வகிப்பது என்பது இயலாத ஒன்றாக மாறியுள்ளது.
எனவே பொறியியல் கல்லூரிகளை சிறப்பாகவும், திறனுள்ள வகையிலும்நிர்வகிப்பதற்காக கூடுதலாக இரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை நிறுவமுடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவையிலும், திருச்சியிலும் இந்த புதிய பல்கலைக்கழகங்கள்நிறுவப்படும். கோவையில் நிறுவப்படுவது கோவை அண்ணா பல்கலைக்கழகம்என்றும், திருச்சியில் நிறுவப்படுவது திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் எனவும்அழைக்கப்படும். சென்னையில் உள்ளது சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எனஅழைக்கப்படும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 105 பொறியியல் கல்லூரிகள்இணைக்கப்பட்டிருக்கும்.
கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, திண்டுக்கல், தேனி, ஈரோடு,கரூர், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள53 பொறியியல் கல்லூரிகள் இணைந்திருக்கும்.
திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி, மதுரை, கடலூர், கன்னியாகுமரி,திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், நாகப்பட்டனம், தஞ்சாவூர், புதுக்கோட்டை,ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 75கல்லூரிகள் இணைந்திருக்கும் என்றார் பொன்முடி.
இந்த பல்கலை. பிரிவினைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்வரவேற்பு தெரிவித்தன. ஆனால் பாமக மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மதுரையிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையைத் தொடங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனபொன்முடி தெரிவித்துள்ளார்.
புதிய பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் தனி அதிகாரிகள் நியமனம்செய்யப்படவுள்ளதாகவும் பொன்முடி தெரிவித்துள்ளார்.