For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு உக்ரைன் போர் விமானங்கள்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:யாழ்ப்பாணத்தையும், இதர பகுதிகளையும் இணைக்கும் ஏ 9 சாலையை மீண்டும் திறப்பது தொடர்பாக இலங்கைஅரசு மற்றும் விடுதலைப் புலிகளுடன் நார்வே சமரசக் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இலங்கையில் சமாதான முயற்சிகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ள நிலையில் மீண்டும் ஒரு அமைதி முயற்சியைநார்வே சமரசக் குழு மேற்கொண்டுள்ளது. கொழும்பு வந்துள்ள குழுவின் தலைவர் ஜான் ஹான்சன் பேயர்,அரசுத் தரப்பில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஏ 9 சாலையை திறந்து விடுமாறு பேயர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதைஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளரும், திட்டஅமலாக்கத் துறை அமைச்சருமான ரம்புகவெல்லா கூறுகையில்,

ஏ 9 சாலையை திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை. வேண்டும் என்றால் யாழ்ப்பாணத்திற்கு உடனடியாக 400லாரிகளில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப இலங்கை அரசு தயாராக உள்ளது. ஆனால், இச்சாலையின்சில பகுதிகளை கட்டுப்படுத்தி வரும் புலிகள் அங்கிருந்து விலக வேண்டும். அப்போதுதான் இந்த உதவியையும்செய்ய முடியும்.

கிளிநொச்சிக்குச் செல்ல பேயருக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. புலிகள் தலைவர்களை அவர்சந்திக்கும்போது இலங்கை அரசின் இந்த முடிவு குறித்து அவர் தெரிவித்து, சாலையிலிருந்து அவர்களைவிலகுமாறு அறிவுறுத்துவார் என நம்புகிறோம் என்றார் ரம்புகவெல்லா.

அரசுத் தரப்பில் கிளிநொச்சி செல்ல அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து பேயர் கிளிநொச்சி சென்று புலிகள்தலைமையுடன் ஆலோசனை செய்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்சுப.தமிழ்ச் செல்வன் கூறுகையில்,

ஏ9 சாலை தொடர்பாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிபந்தனையை ஏற்க முடியாது.ஏ 9 சாலையைத் திறக்க எந்தவித நிபந்தனையையும் அரசுத் தரப்பு விதிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இதேபோல வாகரைக்குச் செல்லும் ஏ 15 சாலையையும் நிபந்தனையின்றி திறக்க இலங்கை அரசுமுன் வர வேண்டும்.

இலங்கை அரசிடமிருந்து எந்தவித ஒத்துழைப்பும் இல்லாத நிலையில், இந்த இரு சாலைகள் குறித்தும் சர்வதேசசமுதாயம் முயற்சிகள் மேற்கொள்வது அர்த்தமற்றதாகும்.

நார்வே தூதுக்குழு, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் சர்வதேட சமுதாயம், இலங்கை அரசின்மனிதாபிமானமற்ற போக்கைக் கண்டிக்காமல் வெறுமனே பேச்சுவார்த்தை மட்டும் நடத்தி வருவதும், வலியுறுத்திவருவதும் தமிழர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி வருகின்றன. அவர்கள் சோர்வடைந்து விட்டனர். நம்பிக்கைஇழந்து வருகின்றனர் என்றார் தமிழ்ச் செல்வன்.

விமானப் படை தாக்குதல்:

இதற்கிடையே வடகிழக்கில் புலிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே மோதல் முற்றி வருகிறது.

சம்பூர் அருகே இலங்கை விமானப்படை தமிழர்கள் பகுதிகளில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.புலிகளின் முகாம்கள் மீதும் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.புலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த உக்ரைன் நாட்டிடமிருந்து நான்கு மிக் 27 ரக செகன்ட் ஹேண்ட்போர் விமானங்களை வாங்க இலங்கை அரசு உத்தேசித்துள்ளது.

இந்த விமானங்களை ரூ. 46 கோடி கொடுத்து இலங்கை வாங்குகிறது. விரைவில் இவை இலங்கைக்கு வந்துசேரும் என ரம்புகவெல்லா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X