விமானங்களை கடத்த பாக் தீவிரவாதிகள் திட்டம்
டெல்லி:நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சல் குருவை விடுவிக்கக்கோரி பாகிஸ்தான் தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில்கைது செய்யப்பட்ட அப்சலுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது தூக்கு தண்டையை ரத்து செய்ய கோரி குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுத்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய விமானங்களைக்த கடத்தி அப்சலை விடுவிக்க திட்டமிட்டிருப்பதாகதகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த சதி திட்டம் குறித்து விமானத் துறைக்கும் உள்துறைக்கும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால்இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications