தேக்கடி: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கம்பம்:முல்லை பெரியாறு அணை பிரச்சனையால் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாககுறைந்து விட்டது.
தமிழக எல்லையையொட்டி கேரளாவில் அமைத்துள்ள தேக்கடி முக்கிய சுற்றலா தளமாக விளங்குகிறது. குமுளிவரை தமிழகம், அதைத் தாண்டிச் சென்றால் தேக்கடி. தேக்கடி அணை தான் முல்லைப் பெரியாறு அணையாகும்.
தேக்கடி அணையில் படகுச் சவாரி செய்யவும், அதைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் திரியும் யானைகள்உள்ளிட்ட விலங்குக் கூட்டத்தைக் காணவும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
இந் நிலையில் முல்லை பெரியாறு பிரச்சனையால் கடந்த இரண்டு மாதமாக தேக்கடிக்கு வரும் சுற்றுலாபயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
இதனால் இப்பகுதியில் ஹோட்டல்கள், லாட்ஜ்கள் தவிர ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள், சுற்றுலா கைடுகளின்வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள சுற்றுலா கைடு ஒருவர் கூறுகையில் முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு கேரள அரசுவிரைவில் தீர்வு காணாவிட்டால் தேக்கடி, குமுளி பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கைகுறைந்து விடும்.
மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களும் வருமானம் இன்றி பாதிக்கப்படுவார்கள் என்றார்.