இந்திய ஒப்பந்தம்-யுஎஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
வாஷிங்டன்:இந்தியாவுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின்பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்தில்அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும்கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் வரைவ மசோதா சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின்செனட் சபையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதிநிதிகள்சபையிலும் ஒப்புதலைப் பெற்ற பிறகே ஒப்பந்தம் அது அமலுக்கு வரும் என்றநிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியா காத்திருந்தது.
இதையடுத்து இறுதி ஒப்பந்த வரைவு மசோதா இந்திய நேரப்படி நேற்றிரவுபிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது சூடான விவாதம் நடந்தது.விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், 330 ஓட்டுக்கள்ஒப்பந்தத்திற்கு ஆதரவாகவும், 59 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.
அடுத்து செனட் சபையில் இறுதி வரைவு மசோதா ஓரிரு நாட்களில் மீண்டும் தாக்கல்செய்யப்படும். அதிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதிபர் ஜார்ஜ் புஷ் இதில்கையெழுத்திடுவார்.
அவர் கையெழுத்திட்ட பின்னர் அணு சக்தி ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரும்.அதன் மூலம் இந்திய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள் மற்றும்தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்கும். மேலும், ராணுவம் அல்லாத அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணு சக்தி கவுன்சில் ஆய்வுக்கு இந்தியாஅனுமதிக்கும்.
கிறிஸ்துமஸையொட்டி அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்படவுள்ளது.அதற்கு முன்பாகவே செனட் சபையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விடும்,புஷ் கையெழுத்திட்டு விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications