16ம் தேதி பந்த்: இந்து மக்கள் கட்சி அழைப்பு
திருப்பூர்:தமிழகத்தில் கோவில்கள் தாக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற 16ம் தேதி தமிழகம் தழுவியபந்த் நடத்த இந்து மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில்கள் மீதுதாக்குதல்கள் நடந்துள்ளன. உச்சகட்டமாக சென்னை அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசித்தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 16ம் தேதி தமிழகம்தழுவிய பந்த் நடத்த இந்து மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் பாலாஜி விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடுராகவேந்திரா மண்டபத்தில் உள்ள ராமர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், சுவாமி தயானந்த சரஸ்வதி மீதுபொய் வழக்குப் போட்டதைக் கண்டித்தும் வருகிற 16ம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம்நடத்தப்படும்.
அன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications