வெறிநாயிடம் சிக்கி 3 வயது சிறுவன் பலி
கோவை:கோவையில், வெறிநாய் கடித்து 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாகராஜ் என்ற சிறுவனை தெருவில் திரிந்த20க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்த சம்பவம் தமிழகத்தையேஉலுக்கியது.
தெருவில் திரியும் நாய்களைப் பிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததற்கு பொதுமக்கள் மத்தியில்பெரும் கண்டனம் எழுந்தது. இன்னும் அப்பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் தொடர்ந்து சுற்றிக்கொண்டுதான்உள்ளன என்பது கொடுமையிலும் கொடுமை.
இந்த சம்பவத்தின் பாதிப்பே மக்கள் மனதிலிருந்து இன்னும் விலகாத நிலையில், கோவையில் வெறிநாய் கடித்து3 வயது சிறுவன் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா. இவரை விட்டு கணவர் பிரிந்து சென்று இன்னொரு கல்யாணம்செய்து கொண்டார். இதனால் வனிதா தனது 3 வயது மகன் அஜீத்துடன் வீட்டு வேலை பார்த்து வாழ்க்கையைஓட்டி வருகிறார். அஜீத்தை அப்பகுதியில் உள்ள பால்வாடியில் சேர்த்துப் படிக்க வைத்து வருகிறார்.
15 நாட்களுக்கு முன்பு அஜீத் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று அஜீத்தை கடித்துக் குதறி விட்டது. இதில் கன்னம், முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அஜீத்தை சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் வெள்ளிக்கிழமை அஜீத் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து அவனை வீட்டுக்குஅழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் கூறி விட்டனர்.
இதையடுத்து அஜீத்தை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் அஜீத்தின் உடல்நலம் மோசமானதைத் தொடர்ந்து மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயேஅஜீத் பரிதாபமாக இறந்தான்.
மருத்துவமனையில் சரியாக சிகிச்சை தராததால்தான் சிறுவன் இப்படி பரிதாபமாக இறக்க நேரிட்டது என்றுதகவல் பரவியதால் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்களை டாக்டர்களும், ஊழியர்களும்,போலீஸாரும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications